Sunday, June 21, 2009
என்னை மன்னிப்பீர்களா அப்பா?
ஊரும் உறவும் உங்களை சுற்றி
I.C.U வில் நீங்களும்...
பல்லாயிரம் மைலுக்கு அப்பால் நானும்
செயலற்ற நிலையில்...
இந்த வாராத மகனை மன்னிப்பீர்களா அப்பா?
சிறு நெருஞ்சிமுள் குத்தினாலே
தாங்க முடியாத நீங்கள்
எப்படியப்பா துணிந்தீர்கள்?
ஐந்து மணி நேரம்
நெஞ்சை கிழித்து இதயத்தை காட்ட...
இந்த பத்து நாட்களில் என்னவெல்லாம்
நினைத்திருப்பீர்கள்?
அறிவியல் படித்த அகந்தையில்
இறைவனின் இருப்பையே மறுத்த எனக்கு
தெய்வமாய் தெரிகிறார்கள்
உங்கள் உயிர்காத்த மருத்துவர்கள்...
ஒருவேளை சிறுவயதில்
விளையாட்டாய் சொல்வது போல்
நான் "தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை" தானோ?
பாசமற்று பரதேசத்தில் கிடக்கிறேனே இன்று...
தலையில் தண்ணீரை அள்ளி அள்ளி
ஊற்றிக்கொள்கிறேன்...
ஆனாலும் நெஞ்சு கணக்கிறது...
எனக்கும் சொல்லுங்களேன்...
நெஞ்சில் சுமக்கும் ரணங்களை
நீரால் கழுவும் வித்தை
தெரிந்தவர் எவரேனும்?
.....
Thursday, June 18, 2009
தாவணியில் வந்த ஒரு நந்தவனமா?
கடந்த இரண்டு வாரங்களில்
மனசுக்குள்ள பல கவலைகள் இருந்தாலும்
அதையெல்லாம் தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டு
நம்ம கூடப் படிச்ச பயலுக்கு கல்யாணம்
நடக்கப் போறத நினைச்சா
ரொம்ப சந்தோசமா இருக்கு.
இராமச்சந்திரன்.
எங்க செட்டு பசங்களிலே இவன்தான்
முதலில் கல்யாணம் பண்ணப்போறான்.
நாங்கெல்லாம்
கல்லூரியில் சேரும் போது
Electronic circuits-ல
ஒரு மண்ணும் தெரியாது.
Bread board-லாம் என்னவென்று
எங்களுக்கு மூன்றாம் செமஸ்டர்
circuit lab பண்றப்ப தான் தெரியும்.
அதுவரைக்கும் நாங்க அது ஏதோ
பேக்கிரி ஐட்டம்னு நினைச்சிட்டு
இருந்தோம்.
ஆனா இவன் மட்டும் திருச்சி SIT ல
Diplamo in Instrumentation
முடிச்சிட்டு வந்த திமிர்ல
எல்லாமே தெரியும்னு
தெனாவட்டா உட்கார்ந்திருப்பான்.
சிலசமயம் எங்க வாத்தியாருக்கே
எதாவது சந்தேகம் வந்தா
இவன்தான் தீர்த்து வைப்பான்.
ஆளு வளரலைன்னாலும்
அறிவு வளர்ச்சி கொஞ்சம் ஜாஸ்தி.
நான் சௌதி வந்து சரியா ஆறு மாதம்
கழித்து அவனும் இங்க
வந்துட்டான்.
எனக்கும் அவனுக்கும் வெறும்
150 கி.மி தூரம் தான் இடைவெளி.
அவன் இங்க இருந்த ஒரு வருடக்காலமும்
சௌதியின் பல பகுதிகளுக்கு பறந்துட்டே
இருப்பான். ஏன்னா அவனோட வேலை அப்படி.
யான்பு, ஜித்தாஹ்,சொய்ஃபா,
ரியாத், கடைசியா அல்-ஜூபைல்.
விடிஞ்சா அவனுக்கு கல்யாணம்.
பொண்ணு போட்டோ-வ மெயில்
பண்ணச் சொன்னா, இதோ அனுப்புறேன்னு
சொல்லிட்டு கடைசிவரை
கண்ணுல காட்டவே இல்லை.
விடுவோமா நாங்க???
இரண்டு வாரங்களுக்கு முன்பு அவனை
வழியனுப்ப ஜுபைல் போயிருந்தேன்.
என் கல்லூரி நண்பர்கள்
ஆணந்த், ரஹிம், அஸ்பாக்
போன்றோரை சந்திக்கும்
வாய்ப்பும் கிட்டியது.
அவன் கொஞ்சம் அசந்த நேரமா
பார்த்து அவனோட லேப்டாப்-ஐ
பிரிச்சு மேஞ்சி தேடு-தேடுன்னு தேடி
ஒருவழியா C: -ல
ஒளிச்சு வச்சிருந்த பெண்ணோட
போட்டோ-வ பார்த்த எங்களுக்கு
பயங்கர ஷாக்!!!
பொண்ணு
ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கு.
அப்புறந்தான் சொல்றான்.
அது அந்த பொண்ணு பத்தாம் வகுப்பு
படிக்கும் போது எடுத்ததாம்.
இந்த போட்டோ-வ மட்டும் பார்த்துட்டு
ஓகே சொல்லிட்டியா?
அவன் பதில் சொல்லவே இல்லை.
பாவம் அவன் என்ன பண்ணுவான்?
முன்னெல்லாம் வகைவகையா
பார்த்ததால GOOD, BETTER, BEST-னு
தேடிட்டு இருப்போம்.
இப்போதெல்லாம் நம்ம ஊரு பொண்ணுங்க
யாரைப்பார்த்தாலும் அழகாத்தான் தெரியுறாங்க.
சமைக்கத் தெரியுமா டா?
அதற்கும் அவனிடம் பதில் இல்லை.
நமக்கும் இதே கதி தானா?
என் வாழ்க்கை துணையைப் பற்றி
பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தாலும்
சமையலை பொறுத்தவரை
மிக மெல்லிசாக தோசை சுடுவதற்கும்,
நல்ல சுவையான "டீ" போடத் தெரிந்திருந்தாலே
போதும்.
கண்டேன் என் சீதையை.
பொண்ணு அவனுக்கு நல்லா
பொருத்தமான ஜோடியா தான் இருந்திச்சு.
மாப்பிள்ளை இப்போ இந்தியா போயிட்டாரு.
சௌதி மாப்பிள்ளை கிடைக்க அந்த பெண்
மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
(எதிர்காலத்தில் எனக்கும் உதவும் என்பதால்
இக்கருத்தினை இங்கு பதிவு செய்ய
வேண்டிய நிர்பந்தம்)
இல்லையா பின்னே?
குடும்பத்தோட வண்டி கட்டிக்கிட்டு
பெண் பார்க்க போறோம்னு போய்
பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு
பொண்ணுக்கு ஆடத் தெரியுமா?
தண்ணிக்குடம் தூக்கத் தெரியுமா? -னு
ஆயிரம் கேள்வி கேட்டு
குடைந்தெடுத்துவிட்டு கடைசியா
வீட்டுக்கு போயி யோசிச்சு பதில்
சொல்றோம்னு Infosys Company
HRD Manager மாதிரி லந்து
பண்ற இந்த காலத்துல,
மெயிலில் வந்த ஒரே ஒரு
போட்டோவை மாத்திரம் பார்த்து
(அதுவும் பத்தாம் வகுப்பு போட்டோ)
ஒகே சொல்லி ஊர் போய்
இறங்கி அடுத்த இருபதாம் நாள் திருமணம்.
வாழ்த்துகள்-டா மச்சான்.
மணமக்கள் இருவரும்
வாழ்வின் எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்.
மணமக்கள்:
இராமச்சந்திரன்.
பரமேஸ்வரி.
மணநாள்:
19/JUNE/2009
இடம்:
சூசையப்பர் திருமண மண்டபம்.
இலால்குடி.
திருச்சி.
எல்லாரும் வந்து வாழ்த்திட்டு போங்க...
Subscribe to:
Posts (Atom)