நேற்று துபாயிலிருந்து என் friend மீர் அப்துல் வாஹித் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்... சமிபத்தில் எடுத்த புகைப்படங்களையும் அதில் இணைத்திருந்தான்...
சில வருடங்களுக்கு முன்பு Bangalore Yokogawa வில் Distributed Control System ல் பயிற்சி பெற நாங்கள் ஐந்து பேர் Bangalore போயிருந்தோம்..
அப்போ இவன் பண்ற சேட்டை தான் அதுல ஹைலைட்.. நாளை மறுநாள் எந்த ஹோட்டல்ல சாப்பிடனும்னு மூணு நாளைக்கு முன்னாடியே ப்ளான் போட்டிட்டு இருப்பான்....
எங்கெல்லாம் சிப்ஸ்-ம், பப்ஸ்-ம் விக்குறாங்களோ அங்க தான் இவன் நின்னுட்டு இருப்பான்.....
Jubleeனு ஒரு மேடம் தான் எங்களுக்கு அப்போ Trainer... அவங்க கிட்ட டவுட் மேல டவுட் கேட்டே ஒரு கேரளா பெண்ணை மயக்க பார்த்தான்... ஆனா முடியலை...
எங்க CLASS-லயே INTELLIGENT இவன்தான்னு CASH PRIZE கொடுத்து பாராட்டின H.O.D, எங்களோட FAREWELL FUNCTION-ல இவனை கூப்பிட்டு பேச சொன்னாரு..
இவனும் முன்னாடி போய் நின்னு “லட்டு நல்லா இருந்துச்சு... ஆனா மிக்சர் தான் சரியில்ல.... வேற நல்ல கடையில வாங்குயிருக்கலாம்ல...” னு சொல்லிட்டு வந்து சீட்ல உட்கார்ந்துட்டான்...
H.O.D. முகத்தை பார்க்கணுமே... நிச்சயமாய் வருத்தப்பட்டிருப்பார்...
பணம் (வடை) போச்சே!!!
இப்போ துபாய் இராஸ்-அல்-கைமா ல புதுசா கட்டிட்டு இருக்கிற ஒரு சிமெண்ட் ப்ளாண்ட்க்கு Pressure Transmitter-ம், Level Transmitter-ம் Configure பண்ணிட்டு இருக்கான்.,.. (ETA ASCON)
Global Economic Crisis காரணத்தை காட்டி வீட்டுக்கு அனுப்பிடுவாங்களோனு பயந்து Part Time job ல மீனு பிடிக்க போறானாம்...
கல்லுரி இறுதியாண்டு படிக்கும் போது இவன் செய்த ஒரு வில்லங்கத்துக்கு அப்பாவி பத்து பேரை சஸ்பெண்ட் செய்தது கல்லூரி நிர்வாகம்..
அதுக்கு மூலக்காரணம் நானும் அவனும் தான்...
நாங்க ரெண்டு பேரும் தப்பிச்சுட்டோம்...
அது ஒரு பெரிய சோக கதை.. அத அப்பறம் சொல்றேன்..
Sunday, March 29, 2009
Friday, March 27, 2009
சும்மா ஒரு விளம்பரம்....
Wednesday, March 18, 2009
வெங்கடேஷும் என் SMS ம்......
இன்னக்கி blog ல என்ன post போடலாம்னு யோசிச்சப்ப ஏன் என் நண்பன் எனக்கு செய்த உதவிக்கு அவனுக்கு நன்றி சொல்லக்கூடாதுனு தோணிச்சி...
நம்ம ஊர்ல உள்ள என் நண்பருக்கெல்லாம் இணையத்தின் வாயிலாக குறுந்தகவல் (அதாங்க SMS) அனுப்ப ஒரு நல்ல இணையதளத்தை தேடிக்கொண்டிருந்தேன்.
பல இணையதளங்கள் இருந்தாலும் அதில் இங்கிருந்துகொண்டு பதிவு செய்வதில் சின்ன சிக்கல்..
என்கிட்ட இந்திய மொபைல் இருந்தா தான் பண்ண முடியுமாம்.. அவங்க (பாஸ்வேர்ட்) கடவுசொல்லை அந்த குறிப்பிட்ட மொபைலுக்கு தான் அனுப்புவாங்களாம்..
இங்கிருந்து நான் ஒரு SMS இந்தியாவுக்கு அனுப்பனா அந்த காச வைச்சி இங்கே ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கலாம்... அப்போ ஒரு கால் பண்ணா????
என்ன பன்றதுன்னு யோசிச்சப்ப என் ஆருயிர் நண்பன் வெங்கடேஷ் Yahoo messenger chat ல வந்தான்.
அவனும் நானும் 3 வருஷம் இஞ்சினியரிங் ஒன்னா படிச்சோம். அவன் LATERAL ENTRY -ல உள்ள வந்த பையன்... அதனால தான் 3 வருஷம்..
Data Structure னு ஒரு பேப்பருக்கு எனக்கு அவன் தான் வாத்தியார். எனக்கும் இன்னும் புரியல என்ன எழவுக்கு அந்த பேப்பர் எங்களுக்குனு.. எல்லாருமே கிறுக்கு பிடிச்ச மாதிரி இருப்போம் அந்த வகுப்புல.
அவன் எனக்கு சில பல வித்தைகள் எல்லாம் சொல்லி கொடுத்து அந்த பேப்பர பாஸ் பண்ண வச்சான்.. தியரி பேப்பர்ல பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டேன் அவன் புண்ணியத்தில..
பிராக்டிக்கல்ல 100 க்கு 98 வாங்குனேன். ஆனா சத்தியமா எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அதுல...
வகுப்புல மிகவும் அமைதியான பையன்.. தல அஜித்துக்கு தீவிரமான ரசிகர், திருச்சி கே.கே நகர் ல மிகப்பெரிய ஆளு..
போதும்னு நெனைக்கிறேன்.....
அப்பேர்பட்ட என் நண்பன் எனக்கு தன்னுடைய மொபைல் மூலமா எனக்கு அந்த வசதியை ஏற்படுத்தி தந்தான். SILENT BUT BRILLIANT...
இப்ப அவன் புண்ணியத்துல எல்லாருக்கும் ஈஸியா SMS அனுப்புறேன்,
நன்றி நண்பா.
Wednesday, March 11, 2009
சேவாக் அடிச்ச செஞ்சுரி
உலக கிரிக்கெட் வரலாற்றின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு வீரர் தனிச்சிறப்பான ஆட்டத் திறனுடன் தோன்றுவர்.
கிரிக்கெட்டின் எந்த ஒரு விதிகளுக்கும் அடங்காமல் படுபயங்கரமாக எதிரணியினரை கதிகலங்க அடித்து வரும் ஒருவர் சேவாக். இன்று நியுசிலாந்துக்கு எதிராக விரேந்திர சேவாக் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டின் மரபான உத்திகள் அனைத்தையும் உடைத்தெறிவதாய் அமைந்து இருக்கிறது.
60 பந்தில் சதமடித்து அசத்தியிருக்கிறார்.
கேப்டன் வெட்டோரி பந்தில் இமாலய சிக்சர் அடித்து தனது 11 வது சதம் கடந்தார்.
முதன் முதலில் அவர் ஆடிய ஆட்டம் பெங்களூரில் ஆஸ்த்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டியில். அந்த ஆட்டத்தில் சச்சின் ஏற்கனவே துவக்கத்தில் களமிறங்கி சதம் எடுத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் பின்னால் களமிறங்கிய சேவாக்கை அப்போது யாருக்கும் அதிகம் தெரியாது. வர்ணனையாளராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து மட்டும் சேவாக்கை "இன்னொரு டைனமைட் வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது" என்று வர்ணித்தார்.
சேவாக்கும் அதனை நிரூபிக்கும் விதமாக அன்று 35 பந்துகளில் அரை சதம் எடுத்தார்! அன்று ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ரா, கில்லஸ்பி போன்ற தலை சிறந்த பந்து வீச்சாளர்கள் கண்களில் பயம் தெரிந்தது.
அப்போது அவர் தன்னை சச்சின் டெண்டுல்கரின் விசிறி என்று கூறியதோடு, ஆட்டத்திலும் அவரது அதிரடி முறையையே பின்பற்றுகிறேன் என்றார்.
இன்று துவக்கத்திலேயே எதிரணியினரின் பந்துகளை துவம்சம் செய்யும் சிம்ம சொப்பனமாக சேவாக் தொடர்ந்து நீடிக்கிறார். இனிமேலும் அப்படித்தான் ஆடப் போகிறார்.
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நியூஸீலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்ட போது 250 ரன்களுக்கும் அதிகமான இலக்கை குறைந்த ஓவர்களில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில், சேவாக் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். அன்று அவர் 69 பந்துகளில் 100 ரன்களை விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். அன்றுதான் இந்தியாவின் புதிய அதிரடி மன்னன் பிறந்ததாக அனைவரும் சேவாக்கை கொண்டாடத் துவங்கினர்.
ஒருமுறை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவ்ர்ட் மெகில்லிடம் போட்டி முடிந்து நிருபர்கள் கேட்டபோது, "நான் தவறாக வீசினேன், சரியாக வீசினேன் என்பதெல்லாம் அல்ல, சேவாக் என்னை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதுதான் வேடிக்கை" என்றார்.
அன்று அவரை மட்டுமல்ல மற்ற எந்த வீச்சாளர்களையுமே அவர் ஒரு பொருட்டாக மதிக்காமல் மைதானம் முழுக்க சிதற அடித்தார்.
இயன் சாப்பல் ஒரு முறை, "இன்னமும் சிறிது காலத்திற்கு சேவாக்கும், கம்பீரும் இது போன்ற அதிரடி முறையைக் கையாண்டு உலகப் பந்து வீச்சாளர்கள் அனைவரையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் போகிறார்கள், இது இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தரும்" என்றார்.
இது போன்று பந்து வீச்சாளரின் பெயர்?
அவரது சாதனை?,
அவர் எவ்வளவு வேகம் வீசுகிறார்?
சுழற்பந்து வீச்சாளாயிருந்தால் அவர் எவ்வளவு தூரம் பந்துகளை திருப்புவார்? என்று கிரிக்கெட்டின் அடிப்படைகளை உடைத்தெறிந்து
“பந்து விழும் இடம் அடி” என்று உள் மனது கூறினால் அடிப்பது இதுவே சேவாக்கின் எளிமையான ஆனால் பயங்கரமான உத்தி.
சேவக் குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வெட்டோரி,
"சேவக் ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அவரிடம் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். அவரை கட்டுப்படுத்த எங்களுக்கு வழி தெரியவில்லை”.
Saturday, March 7, 2009
26 கி.மீ இடைவெளியில் எத்தனை மாற்றம்......
பஹ்ரைன் Vs சௌதி அரேபியா
பஹ்ரைன்...
ஒரு குறும்தீவு இது.சுற்றிலும் கடல்.
நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.
பளீர்சாலைகள்.
இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.
அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே உலாவருகிறார்கள்.
சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்.
போதை வஸ்துக்களுக்காக கடுமையான சோதனை.
அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.
பஹ்ரைனில் வாழ்கை கொஞ்சம் ஜாலிதான்.
இங்கிருந்து தரைவழியாகவே போய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.
பஹ்ரைன் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு கடல்மேல் நீண்ட பாலம் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 26 கிலோமீட்டர்கள்.
சுற்றிலும் கடலை பார்த்த படியே பயணிக்கலாம். நடுவில் சௌதியில் நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.
உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.
எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.
பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.
கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.
வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.
பெரும்பாலான வாகனங்களில் பல பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும் இந்தியர்களும் அவர்களை ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.காரணம் பயம்.
எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்..
"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் தோழி சொன்னது ஏனோ என் நினைவுக்கு வந்தது...
நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்...
ஓடும் வாகனங்களும் அப்படியே...
அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது...
எல்லாமே இரண்டு இரண்டு...
பெண்களுக்கொரு மார்க்கெட்.
ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக எல்லாம் இரண்டு.... A.T.M உட்பட...
தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.
அராம்கோ-பெட்ரோல் பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.
கடுமையாக உழைக்கும் இந்தியர்களை பார்க்கமுடிகிறது.
சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை. கண்டாலும்?????
கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பஹ்ரைன் வந்து செல்கிறார்கள் பல சௌதி குடிமக்கள்...
நம்ம ஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக ஏர்போர்ட் நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.
ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.
ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்போ இது தான் நம் வாழ்கை.
தாவணி பெண்களும்,
மல்லிகை வாசமும் மறந்தே போய்விட்டது...
இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும்....
அந்நிய தேசத்தில் அடிமையாய் நான்..
சுற்றலும் மனிதம் அற்றுப்போன மனிதர்கள்..
பஹ்ரைன்...
ஒரு குறும்தீவு இது.சுற்றிலும் கடல்.
நடுவே கண்ணாடி மாளிகைகள் அடுக்கடுக்காய்.
பளீர்சாலைகள்.
இருமருங்கிலும் செயற்கையாய் பச்சை ஆக்கியிருக்கிறார்கள்.
அரபு நாடென்றாலும் ரொம்ப கெடுபிடியில்லை.
அழகிய நங்கைகள் நவ நாகரீக உடைகளில் ஆங்காங்கே உலாவருகிறார்கள்.
சந்தேகித்தால் முழு பயணப்பெட்டியையும் விமானநிலயத்தில் சோதிக்கிறார்கள்.
போதை வஸ்துக்களுக்காக கடுமையான சோதனை.
அப்பப்போ ஏதாவதொரு திருவிழா நடந்துகொண்டேஇருக்கிறது.
பஹ்ரைனில் வாழ்கை கொஞ்சம் ஜாலிதான்.
இங்கிருந்து தரைவழியாகவே போய்விடலாம் சௌதி அரேபியாவுக்கு.
பஹ்ரைன் கடல் தீவிலிருந்து சௌதிஅராபிய நிலப்பரப்புக்கு கடல்மேல் நீண்ட பாலம் அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 26 கிலோமீட்டர்கள்.
சுற்றிலும் கடலை பார்த்த படியே பயணிக்கலாம். நடுவில் சௌதியில் நுழையும் போது கெடுபிடி ஆரம்பிக்கிறது.
உங்கள் பயணபெட்டிகள் சுத்தமாய் அலசப்படும்.
எதைவேண்டுமானாலும் அவர்கள் குப்பையாய் தூக்கி எறியலாம்.
பெண்கள் முழு பர்தா அணிய துவங்கிவிடுகின்றனர்.
கருப்பாய் முழுநீள அங்கி அவ்ளோதான்.
வாகனங்களெல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட பழம் பெரும் வாகனங்கள்.
மண்ணும் சேறும் அப்பியிருக்கிறது.
பெரும்பாலான வாகனங்களில் பல பெண்கள் உட்பட குடும்பம் குடும்பமாய் குந்தியிருக்கிறார்கள்.
பாகிஸ்தானியரும்,பங்ளாதேசியர்களும் இந்தியர்களும் அவர்களை ஏறெடுத்துக்கூட பார்ப்பது இல்லை.காரணம் பயம்.
எல்லோருக்கும் சட்டமும்,விதிகளும் நடப்பு நிலவரங்களும் நன்கு தெரிகிறது.
முழு பரிசோதனைக்கு பின் சௌதிக்குள் நுழைகின்றோம்..
"டேய் நீ ரொம்ப குடுத்துவச்சவன்" என என் தோழி சொன்னது ஏனோ என் நினைவுக்கு வந்தது...
நீண்ட பரந்த சாலைகள்.இருபுறமும் குப்பைகள்...
ஓடும் வாகனங்களும் அப்படியே...
அல்கோபார்,தமாம் என்று அந்த பயணம் தொடர்கிறது...
எல்லாமே இரண்டு இரண்டு...
பெண்களுக்கொரு மார்க்கெட்.
ஆண்களுக்கொரு மார்க்கெட் இப்படியாக எல்லாம் இரண்டு.... A.T.M உட்பட...
தனியாக வேலை செய்யும் ஆண்கள் பெரிய மூடப்பட்ட சுற்று சுவர்களுக்குள் வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு காம்ப்பவுண்டும் ஒரு உலகம்.
அராம்கோ-பெட்ரோல் பெரும்பாலான தொழில்கள் இதை சார்ந்தே இருக்கின்றன.
கடுமையாக உழைக்கும் இந்தியர்களை பார்க்கமுடிகிறது.
சாலைகளில் பெண்களை காண முடிவதில்லை. கண்டாலும்?????
கொஞ்சம் சுதந்திரமாய்(?) இருக்க அப்பப்போ பஹ்ரைன் வந்து செல்கிறார்கள் பல சௌதி குடிமக்கள்...
நம்ம ஊர் ஆட்கள் ஒராண்டோ அல்லது ஈராண்டோ கழித்து விடுமுறையில் இந்தியா போக ஏர்போர்ட் நுழைந்ததும் அவர்கள் சந்தோசம் பார்க்க வேண்டுமே மகிழ்ச்சி தெளிவாய் தெரிகிறது.
ஒருகணம் சிறு பெருமூச்சுவிட்டு இதயம் அடங்குகிறது.
ஒருகாலத்தில் ஆடிய ஆட்டமென்ன இப்போ இது தான் நம் வாழ்கை.
தாவணி பெண்களும்,
மல்லிகை வாசமும் மறந்தே போய்விட்டது...
இப்படித்தான் எழுதியிருக்கிறது.இப்படிதான் நாம்
பயணித்தாகவேண்டும்....
அந்நிய தேசத்தில் அடிமையாய் நான்..
சுற்றலும் மனிதம் அற்றுப்போன மனிதர்கள்..
Monday, March 2, 2009
நாம எல்லாரும் சேர்ந்து துபாய் போகலாமா???
Sunday, March 1, 2009
எங்கே அந்த கைகள்.......
Subscribe to:
Posts (Atom)