Monday, November 9, 2009

தோசை



கை நிறைய காசிருந்தும்

நாக்கு ருசிக்கலையே...

நம்ம ஊரு சாப்பாட்டை

தின்னு பல நாளாச்சு…

நானும் சமைக்குறேன்னு

உலைக்கு அரிசி போட்டு

வேகும்வரை காத்திருந்து

கையில் சூடுபட்டு

வேகாம இறக்கிவச்சி

வெங்காயம் வெட்டுறப்ப

அடிக்கடி வருது அம்மா ஞாபகம்!!

கண்ணீரும் கொட்டுது...

ஆசையா அம்மா செஞ்ச தோசையையும்

தங்கச்சி செஞ்ச சட்னியும்

சரியில்லைனு தட்டோடு தூக்கி எறிஞ்ச பாவம்...

சும்மாவா போகும்???


.

செய்தியோடை...